17 ஆகஸ்ட், 2010

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்கள்






மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் மானிய அடிப்படையில் 80, இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதிப் பணிப்பாளர் ஆர். லூசாந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒவ்வொன்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த உழவு இயந்திரங்கள் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

செலுத்தப்பட வேண்டிய இரண்டரை இலட்சம் ரூபாவையும் தவணை அடிப்படையில் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக