17 ஆகஸ்ட், 2010

சன் கப்பலில் இளைஞர் ஒருவர் கடந்த 28ம் திகதி மரணம்



கனடாவுக்கு சென்ற கப்பலில் இருந்த தமிழ் இளைஞர் ஒருவர் இக்கடற் பயணத்தின் போது இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.

37 வயது உடைய இளைஞர் ஒருவரே கடந்த 28ம் திகதி உயிரிழந்தார். ஆயினும் இவரின் மரணத்துக்கான காரணம் தெரி யாமல் உள்ளது.

சடலம் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மனைவியும், ஒரு குழந்தையும் இலங்கையில் இருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பலில் 350 ஆண்களும் 50 பெண்களும் 50 சிறார்களும் சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக