17 ஆகஸ்ட், 2010

தாய்வான் கப்பல் சிப்பந்தி மாயம்


கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த தாய்வான் நாட்டு கப்பலில் பணிபுரிந்த சிப்பந்தி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி கூறினார்.

இந்தக் கப்பல் கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதோடு 10 ஆம் திகதி முதல் இந்தோனேஷிய நாட்டு சிப்பந்தியை காணவில்லை என கொழும்பு துறைமுக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

22 வயதுடைய செப்ரியான்ட் முஜேன்டோ என்பவரே காணாமல் போன சிப்பந்தி என பொலிஸார் கூறினர். துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக