10 ஜூலை, 2010

பௌத்தாலோக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதால் பௌத்தாலோக மாவத்தை முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த வீதியில் வாகனங்கள் எதுவும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள் வீதியை இடைமறித்து அமர்ந்திருப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக