10 ஜூலை, 2010

அசாதாரண நிலையைத் தவிர்க்க உடனடி நடவடிக்கை : அரசிடம் பான் கீ மூன் கோரிக்கை

ஐநா அலுவலகதுக்கு முன்னால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஐநா செயலாளர்நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இலங்கை ஐநா அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்றுவரும் அமைதியற்ற நிலைமையை நீக்குமாறும் இயல்பு நிலையைத் தோற்றுவிக்குமாறும் அரசை பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐநா நியமித்துள்ள குழுவானது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படு்ம் மனித உரிமைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவே அன்றி இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைக்கல்ல எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது கருத்தை ஏற்று இலங்கை அரசு செயற்படும் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக