10 ஜூலை, 2010

இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

:

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக் கோரி ஜூலை 12-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கடல் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய தாக்குதல்களை மத்திய அரசு இதுவரை கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ முனைப்புடன் செயல்படவில்லை.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவை கலைக்க வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக் கோரி வரும் 12-ம் தேதி காலை 10 மணியளவில் அத்தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக