10 ஜூலை, 2010

நித்யானந்தா சொற்பொழிவுக்கு தடையை விலக்கியது கர்நாடக உயர்நீதிமன்றம்





நித்யானந்தாவை பிணையத்தில் விடுவிக்கும்போது விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தளர்த்தியது. இதில், அவரது சொற்பொழிவுக்கான தடை விலக்கப்பட்டதால், வரும் 11-ம் தேதி பெங்களூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவாற்ற உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், அண்மையில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா பி்ன்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது.

இதையடுத்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக, ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரில் உள்ள பிதாதி ஆசிரமத்தில் நித்யானந்தா சொற்பொழிவு ஆற்றுகிறார். இதில், பக்தர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக