28 ஜூன், 2010

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்: சிறுமியை கடத்தி கொன்ற காவலாளி

கொரட்டூர்வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்:    சிறுமியை கடத்தி    கொன்ற காவலாளி சேது பாஸ்கரா நகர் மாதனால் குப்பத்தில் குழந்தைகள் காப்பகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு திண்டிவனத்தை சேர்ந்த எத்திராஜ் (40) காவ லாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் மனைவி செல்வி, மகள் கவுரி (6) ஆகியோருடன் கட்டிடம் கட்டும் இடத்திலேயே குடிசை வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 19-ந்தேதி இரவு எத்திராஜ் குடும்பத்தோடு தூங்கி கொண்டிருந்தார்.

திடீரென அவரது மகள் கவுரியை காணவில்லை. இதுகுறித்து எத்திராஜ் கொரட்டூர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொரட்டூர் ஏரிக்கரையில் கவுரி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

கவுரி கழுத்து நெரிக்கப்பட்டும், பலாத்காரப்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதற்கு முன்பு காவலாளியாக வேலை பார்த்த ஜெயராமன் (40) என்பவர் சிறுமி கவுரியை கொலை செய்தது தெரிய வந்தது.

கொரட்டூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். ஜெயராமன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் காப்பக கட்டிடத்தில் இதற்கு முன்பு நான்தான் காவலாளியாக வேலை பார்த்தேன். தினமும் குடித்து விட்டு வந்து மேஸ்திரி அண்ணாத்துரையிடம் சண்டை போடுவேன். ஒழுங் காக வேலையும் பார்க்க மாட்டேன்.

இதுபற்றி அண்ணாத்துரை கட்டிட என்ஜினீயர் மோகனிடம் புகார் கூறினார். இதனால் அவர் என்னை வேலையில் இருந்து நீக்கினார். பிறகு அண்ணாத்துரை உறவினர் எத்திராஜை வேலைக்கு சேர்த்தார்.

இதனால் அண்ணாத் துரை மீது ஆத்திரம் ஏற்பட்டது. பழி வாங்கதிட்டம் தீட்டினேன். அதனால் 19-ந்தேதி இரவு எத்திராஜ் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கவுரியின் வாயை பொத்தி தூக்கி வந்தேன்.

அவளை பலாத் காரம் செய்தேன். பின்னர் கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் பிணத்தை வீசி விட்டு ஓடிவிட்டேன். கவுரியை கொலை செய்யும் போது அதிகமாக மது குடித்தேன்.

என் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக எத்திராஜ் வீடு அருகில் உள்ள எனது 2-வது மனைவி வீட்டில் தங்கினேன். கவுரி பிணம் கிடைத்ததும் தலை மறைவானேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக