28 ஜூன், 2010

கொல்கத்தா துறைமுகத்தில் பிடிபட்ட கப்பலில் 40 டன் ஆயுதங்கள்






வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு ஏசியான் குளோரி என்ற கப்பல் புறப்பட்டுச் சென்றது. லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பல் கொல்கத்தா துறைமுகத்துக்கு வந்தது. நேபாள ராணுவத்துக்கான சில வாகனங்களை அங்கு இறக்கியது.

அந்த கப்பலுக்குள் இருந்த பெரிய கண்டெய்னர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கப்பலை சோதனையிட்டனர். அப்போது கப்பலில் வெடிபொருட்கள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கப்பல் கேப்டனை போலீசார் கைது செய்தனர். கப்பலும் சிறைபிடிக்கப்பட்டது. அந்த கப்பலில் உள்ள நவீன, பயங்கர ஆயுதங்களுக்கு முறைப்படி எந்த ஆவணமும் இல்லாதது தீவிர விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நவீன ஆயுதங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சந்தேகம் வலுத்ததால் கப்பலுக்குள் என்னென்ன ஆயுதங்கள் உள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆயுதங்கள் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை. அவற்றின் மொத்த எடை 40 டன்கள் என்று தெரிய வந்துள்ளது. 152 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 19 .பேர் இருந்தனர் அவர்களிடம் தனி தனியாக விசாரணை நடை பெற்று வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக