28 ஜூன், 2010

செம்மொழி மாநாடு நேற்று நிறைவு முதல்வர் கருணாநிதி முடிவுரை; நினைவு முத்திரை வெளியீடு





தமிழகத்தின் கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்ப மாயின.

இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமான இறுதிநாள் நிகழ்வுகளில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மு.க. அழகிரி, ஆ.ராசா, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்றைய இறுதிநாள் மாநாட்டு நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றதுடன் மாநாட்டையொட்டிய சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிட்டுவைத்ததுடன் முதலாவது முத்திரையை முதலமைச்சர் மு.கருணாநிதி பெற்றுக் கொண்டார். முதல்வர் மு. கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட் டத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், இது மாவட்ட அபிவிருத்திக்கு முக்கிய பங் களிப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜூலை நடுப்பகுதியில் அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள் ளமையை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்தார்.

இது குறித்து கிளிநொச்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னோடி நட வடிக்கைகள் சம்பந்தமாகக் கேட்டபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரி விக்கையில், கடந்த சுமார் மூன்று தசா ப்த காலமாக யுத்த சூழலினால் கிளிநொச்சி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டது. இம்மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், குடிநீர், மின் சாரம், பாதைகள் புனரமைப்பு தொழில் முயற்சிகளை மீள ஆரம்பித்தல் போன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளன.

இவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு இவற்றை நடைமுறைப்படுத்து வது சம்பந்தமாக வேண்டுகோள் விடுக் கப்படும்.

அத்துடன் இந்த விடயங்களை உள்ள டக்கிய அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக