18 ஜூன், 2010

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையே நாட்டுக்கு நல்லது- கருஜெயசூரிய

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையே நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையானது நாட்டின் மக்களின் நன்மைக்காக பயன்படுத்தாமல் அரசாங்கம் தமது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது. எனவே நாட்டில் வாழ்கின்ற பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை நாட்டில் ஏற்றபடுத்த வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக