18 ஜூன், 2010

ஜப்பான் அரசாங்கத்தினால் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 70.8 மில்லியன் ரூபா நிதியுதவி

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 70.8 மில்லியன் ரூபா நிதியுதவி ஜப்பானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிதியுதவி மூலம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி இன்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இரண்டு உளவு இயந்திரங்கள் 32 டிரக்டர்கள் முதலானவையை வழங்கியுள்ளார்.

பொருளாதார அமைச்சர் படிஙீல் ராஜபக்டி தலைமையிலான குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிகழ்வுகள் பொருளாதார அமைச்சர் பல் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினாகளாக வட மாகாண ஆளுனர் ஜீ.எ.சந்தரஸ்ரீ,விவசாய துறை அமைச்சர் மஹிந்த யாப்பா ஆபவர்த்தன, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக