18 ஜூன், 2010

இன்றைய வெற்றி நிகழ்வுகளில் ஜெனரல் சரத்துக்கு அழைப்பில்லை

இன்று கொழும்பில் நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு ஓராண்டு பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட போது இராணுவத் தளபதியாகச் செயற்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதனிடையே. இது ஒரு தேசிய நிகழ்வு எனவும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல எனவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற கொறடா ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாம் நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதாக என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக