18 ஜூன், 2010

சீபா உடன்படிக்கை: இரு தரப்பும் நன்மையடையும் வகையில் ஒப்பந்தத்தில் திருத்தம்


இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யிலான ‘சீபா’ வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இரு தரப்பும் நன்மை அடையும் வகையில் கைச்சாத்திடப்படுமென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது ஒரு தரப்புக்கு மட்டும் சாதகமாக மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட நான்கு வருடங்கள் சென்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ‘சீபா’ உடன்படிக்கை தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த உடன்படிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இரு நாடுகளுக்கும் பாதகம் இல்லாத நிலையில் விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக