1 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் 437 வீடுகள் இன்று மக்களிடம் ஜனாதிபதியினால் கையளிப்பு






வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணு வத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437 வீடுகள் இன்று பொதுமக்களிடம் கைய ளிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார்.

வீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். மீளக் குடி யேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேட மாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர்.

வீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப் பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக