3 டிசம்பர், 2010

நாடு திரும்பிய ஜனாதிபதி விமான நிலையத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்

பிரித்தானிய விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யு.எல் 501 என்ற விசேட விமானம் மூலம் சற்றுமுன் விமானநிலையம் வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதியை வரவேற்க அமைச்சர்கள் பலர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி விமான நிலையத்தில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார் (இணைப்பு02)

லண்டன் விஜயத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்டி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மத வழிபாடுகளில் கலந்துகொண்டதாகவும் அவரை வரவேற்க பெருந்திரளான பொதுமக்கள் வருகை தந்திருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக