3 டிசம்பர், 2010

புலம்பெயர் தமிழ் அமைப்புடன் இணைந்து அரசுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு அரசியல்வாதிகள் மீது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டு களை பரப்பும் அரசியல்வாதிகள் குறித்து பாது காப்பு அமைச்சு கவனம் செலுத்தி யுள்ளது.

இவர்க ளுக்கு எதிரான முழு அறிக்கை யும் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பொலிஸ் மா அதிபரின் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

முதன் முறையாக இலங்கைக்கு எதிரான அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோ காட்சியை செனல் 4 அலை வரிசை காண்பித்த போது உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். ஆனால் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளை செனல் 4 அலைவரிசை காண்பித்துள்ளது. இது முற்றிலும் பொய்யான வீடி யோவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக