3 டிசம்பர், 2010

பயங்கரவாதம் தொடர்பில் கையாளும் கொள்கைகள் பொதுவாக அமைதல் வேண்டும் பிரிட்டனில் ஜனாதிபதி




பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்க ப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாத த்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன தரத்திற்கேற்ப நாட்டிற்கு நாடு வேறுபடலாகாது என்றும் கேட்டுக்கொண்டார்.

நேற்று (02) பிரிட்டிஷ் பாராளு மன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை சந்தித்த போதே ஜனாதிபதி மேற்கண்ட வாறு வலியுறுத்தினார்.

உலகின் எந்தப் பாகத்திலாக இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரி தும் துணைபுரியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

அமைதியான இலங்கை தேசத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பற்றி பிரித்தானிய பாராளுமன்றக் குழுவி டம் விளக்கிக் கூறிய ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணி களுக்கு பிரிட்டன் வழங்கி வரும் ஒத்துழைப்பினை பாராட்டினார்.

இலங்கையில் 90 இற்கும் அதிகமான அரச சார்பற்ற அமைப்பு கள் இயங்கி வருவதாகவும், அந்த அமைப்புகள் வடக்குப் பிரதேசத்தின் மீள்குடியமர்த்தல் மற்றும் அபிவிருத் திப் பணிகள் என்பவற்றினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பெரிதும் எதுவிதத் தடையுமின்றி தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வ தற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் வாழும் அனைத்தின மக்களும் சுதந்திர மாக தமது பணிகளை மேற்கொள் வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ள தாகவும் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக