3 டிசம்பர், 2010

நோர்வேயின் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கு விசா மறுப்பு

நோர்வேயின் சமாதான முயற்சிகள் ஏன் தோல்வி அடைந்தன என்று ஆய்வு நடத்த அந்நாட்டில் இருந்து வருகை தர இருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவருக்கும் விசா அனுமதி வழங்க இலங்கை மறுத்துள்ளது.

நோர்வே 1997ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான அனுசரணையாளராகப் பணி ஆற்றியது. ஆனால் இவ்வனுசரணைப் பணி தோல்வி அடைந்து விட்டது.

இத்தோல்வியின் காரணம் என்ன என்பதைக் கண்டறிய இருவரும் இலங்கை வர இருந்தனர். இவர்களில் ஒருவர் நோர்வேயைத் தளமாக கொண்டு இயங்கும் இகீஙு. ஙடுஷகீடீங்ஙூடீடூ'ஙூ ஐடூஙூசிடுசிசீசிடீ இன் தலைவரான கினர்சோர்போ ஆவார்.

இவர் அண்மையில் நோர்வேக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்கவைச் சந்தித்து உரையாடி இருந்தார். இலங்கைக்கு வந்து அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரைச் சந்தித்து நோர்வேயின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அபிப்பிராயம் பெற அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இருவரும் உத்தேசித்து இருந்தனர். விசாக்கள் மறுக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருக்கின்றனர். நோர்வேயின் முயற்சி இலங்கைக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக