3 டிசம்பர், 2010

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவை; இந்திய அமைச்சரவை அனுமதி


தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக