12 டிசம்பர், 2010

வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்காளர் பிரச்சினை: தேர்தல் ஆணையாளரை சந்தித்துப் பேச மு.கா. முடிவு

வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த தமது கட்சியின் முக்கியஸ்தர்களுடன் தேர்தல் ஆணையாளரை விரைவில் சந்திக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நூர்தீன் மஷணுர் திடீரென மரணித்த சூழ்நிலையில், வன்னி

மாவட்டத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக, நமது தலைமையில் கொழும்பில் வன்னி மாவட்ட முஸ்லிம் களுடன் நடைபெற்ற கட்சியின் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் அமைச்சர் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

மறைந்த நூர்தீன் மஷணுர் பிரதிநிதித் துவப்படுத்திய வன்னி மாவட்ட முஸ்லிம் களை அரசியல் அநாதைகள் ஆவதற்கு விடப் போவதில்லை என்றும், அவர்களுக்காக கட்சி அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

மிக விரைவில் தாமும், கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்களும் ஏனைய முக்கியஸ் தர்களும் முதலில் புத்தளத்திற்கும், அங்கு ள்ள இடம்பெயர்ந்த முஸ்லிம் களுக்கான நலன்புரி முகாம்களுக்கும், செல்லவிருப்ப தாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

அங்கு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடைபெறவுள்ளதோடு, மறைந்த பாராளு மன்ற உறுப்பினர் நூர்தீன் மஷணுரின் நினைவாக துஆ பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. வன்னி மாவட்டத்திற் கான விஜயங்களை வேறு தினங்களில் மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டு ள்ளது. பிரஸ்தாப முதலாம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த 6ம் திகதி திங்கட்கிழமை காலையில் இரண்டு மணி நேரமும் இரவில் நள்ளிரவையும் தாண்டி நடை பெற்றுள்ளதோடு, அவற்றின் தொடர்ச்சியாக மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 9ம் திகதி வியாழக்கிழமை மாலையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர் ந்த எருக்கலம்பிட்டி, தாராபுரம், சிலாபத் துறை, காக்கையன்குளம், விடத்தல் தீவு, பண்டாரவெளி, முசலி, அடம்பன் , பொற் கேணி, நாணாட்டான், நாகவில் போன்ற பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள் இக் கலந்துரையாடல்களில் பங்குபற்றியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மஷணுரின் திடீர் மறைவினால் வெற்றிடமாகி யுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிகாரத்தை வன்னியில் தொடர்ந்தும் நிலைநிறுத்தித் தக்க வைப் பதற்கான வழிவகைகள் குறித்து இக் கூட்டடத் தொடரின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன் அலி இந்த கலந்துரை யாடல்களில் பங்குபற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக