12 டிசம்பர், 2010

பிரிட்டன் மாணவர் விசா: கட்டுப்பாடுகள் அதிகரிப்பு



பிரிட்டனுக்கு மாணவர் விசாவில் செல்பவர்கள், தமது படிப்பை நிறைவு செய்த பின்னர் அங்கு வேலை தேடித் தங்க முடியாதவாறு விசா நடைமுறைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரவுள்ளதாகவும், ஆங்கில பாடத்தகுதி கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் டொமினியன் கிரீன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சீனா, இந்தியா, அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் மாணவர் விசாவில் வருவதாகவும், இவ்வாறு மாணவர் விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குள் நுழைவதையும், மாணவர் களின் எண்ணிக்கையையும் அரசு கட்டுப்படுத்த விரும்புவதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் தமது கல்விக்காக பிரிட்டன் வரும் மாணவர்கள் கற்கைநெறி முடிந்ததும் அங்கிருந்து திரும்பிவிட வேண்டுமெனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் டொமினியன் கிரீன் தெரிவித்தார்.

எனவே இனிவரும் காலங்களில் பட்டதாரிக் கற்கை நெறிக்குக் கீழுள்ள கற்கை நெறிகளைத் தொடர அனுமதி மறுக்கப்படவுள்ளது. இவ்வாறு பட்டதாரிக் கற்கைநெறிக்குக் கீழுள்ள கற்கைநெறிக்கு வரும் மாணவர்களே தமக் கென ஒரு வேலையைத் தேடி சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்குவதாகக் கூறிய டொமினியன் கிரீன், இனி ஆங்கிலப் பாடத்த குதியையும் இறுக்கமாக்கி இவ்வாறு தங்கு பவர் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்ட மிட்டுள்ளது என்றார்.

பிரிட்டனுக்குள் செல்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மாணவர் விசாவிலேயே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதோடு ஒரு கற்கை நெறி முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் கற்க விரும்பினால் அம்மாணவர்கள் தங்கள் நாடு சென்று, புதிதாக விசா பெற்று வரும் நடைமுறையும் அமுலுக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக