12 டிசம்பர், 2010

பூசாரிகள் மூவர் மீது துப்பாக்கிச் சூடு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சங்கானையில் நேற்றிரவு 3 பூசாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கும் வாள்வெட்டுக்கும் இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானை இலுப்பைத் தாழ்வு முருகன் ஆலய பூசாரிகளான சி.நித்தியானந்தக் குருக்கள் (வயது - 57), அவரது மகன்களான ஜெகானந்தசர்மா (வயது - 26), சிவானந்த சர்மா (வயது-32) என்பவர்களே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களராவர்.

குறித்த குருக்கள் குடும்பத்தினர் நேற்றய தினம் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றினை வவுனியாவிலிருந்து கொள்வனவு செய்து கொண்டுவந்தனர். நேற்றிரவு 8 மணியளவில் இவர்கள் வீட்டிற்கு நுழைந்த முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளினை திருட முற்பட்டுள்ளனர்.

பிரதம குருவும் அவரதும் மகனும் திருடர்களைத் தடுக்கவே அவர்களை வாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் விட்டு மோட்டார் சைக்கிளையும் கொண்டு சென்றுள்ளனர்.

மிகமோசமாகப் படுகாயமடைந்த மூவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக