12 டிசம்பர், 2010

ஐ.தே.க. 3ஆக பிளவு: ஸ்ரீகொத்தாவில் இன்று கட்சி சம்மேளனம்

ஐக்கிய தேசிய கட்சி மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள நிலையில், இன்று (12) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் சம்மேளனம் நடைபெறுகிறது.

இதேவேளை, இந்தச் சம்மேளனத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லையெனத் தெரிய வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பொன்று அண்மையில் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சம்மேளனத்தைக் குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சம்மேளனத்தில் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகலாம் என்றும் தெரியவருகிறது.

சம்மேளனம் நடைபெறுகின்ற நிலை யில், மூன்று பிரிவுகளும் தனித்தனியாகக் கூட்டங்களை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. நேற்று மாலை நான்கு மணியளவில் பம்பலப்பிட்டி பகுதியில் ஹம்பாந்தோட்டை எம்.பி. சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூட்ட மொன்று நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக