1 டிசம்பர், 2010

திருக்கோயில் கடலில் காணாமல்போன இளைஞர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

அம்பாறை திருக்கோவில் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

பதுளையைச் சேர்ந்த வி. செல்வக்குமார் (வயது 21) என்ற இளைஞனின் சடலத்தையே இன்று காலை 9.10 மணியளவில் திருக்கோவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குளிக்கச்சென்ற இடத்திலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விளைஞனின் சடலம் திருக்கோவில் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மற்றைய இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுவருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக