24 டிசம்பர், 2010

விடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு விளக்கமறியல்



இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வவுனியாவல் வைத்துக் கைது செய்யப் பட்ட கமலினி அல்லது சுப்ரமணியம் சிவகாமினி என்ற பெண்ணை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் முக்கிய உறுப்பினர் எனச் சந்தேகிக்கும் இவர் அவ்வமைப்புக்கு ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டதாச் சந்தேகிக்கப்படுகிறது.

இவர் பற்றிய அறிக்கை சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்தே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக