24 டிசம்பர், 2010

கணவனுடன் முரண்பட்டு காதலன் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்

சிகிரியாவில் மூன்று தினங்களுக்கு முன் காணாமற் போய் தேடப்பட்ட பெண்ணும் குழந்தையும் கல்கிஸையில் காதலன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பெண் கடந்த 20ம் திகதி சிகிரியா சிங்க பாதத்தின் அருகில் நின்றபோது காணாமற் போனதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பொதுமக்களும் கடந்த 3 நாட்களாக அவர்களைத் தேடினர். எனினும் பலன் கிடைக்கவில்லை.

அதன்பின்னர் பெண்ணும் குழந்தையும் கல்கிஸையில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. தனது கணவருடன் முரண்பட்டுக்கொண்ட அப்பெண் காதலன் வீட்டுக்குச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக