24 டிசம்பர், 2010

சபரிமலை தரிசன நேரம் அதிகரிப்பு

சபரிமலையில் மண்டல பூஜை வரை பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து கொண்டே போவதால் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் எதிர் வரும் 27 ஆம் திகதி மண்டல பூஜை வரை தரிசனம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 2 மணிக்கு அடைக்கப்படும்.

இதேபோன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 க்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஒன்றரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் 18 ஆம் படி ஏறி வருவதற்காக 24 மணி நேரமும் 18 ஆம் படி திறந்து இருக்கும். அப்போது சுவாமி நடை அடைக்கப்பட்டு இருந்தாலும் பின்னர் வடக்கு வாசல் வழியாக வந்து நடை திறந்திருக்கும் போது பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக