10 நவம்பர், 2010

தாதிமார் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவில்லை: ஹெக்டர் வீரசிங்க

தமது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் எவ்வித பொறுப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இன்று நடைபெறவிருந்த தாதிமார் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் நடாதத்துவதாக தாதிமார் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும் போராட்டத்தில் ஈடுபடாமல் வழமைபோன்று பணிகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறு ஒரு போராட்டத்தில் ஈடுபட இருந்தமை பொய்யான தகவல் எனவும் தெரவித்தார்.

இதேவேளை நடாளாவிய அனைத்து தேசிய வைத்தியசாலைகளிலும் தாதிமார் தமது பணிகளில் ஈடுபடுவதாகவும் கடமைக்குச் சமூகம்தராத தாதிமார் கடமையிலிருந்து விலகியதாகவே கருதப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக