10 நவம்பர், 2010

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை: சோனியா காந்தி

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது என்றும் அவர்கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடந்த அக்டோபர் 8 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியாகாந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் அந்தக் கடித்தில் மேலும் பிரஸ்தாபித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக