10 நவம்பர், 2010

மத்திய பகுதியில் தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி


மத்திய பகுதியில் தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி அதிகரிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் கூறினார். அந்த பகுதிகளுக்கு 2 நாள் பயணமாக சென்ற இலங்கைக்கான இந்தியதூதர் அசோக் ஏ கனத்தா, அங்கு வீடுகள் கட்டுவதற்கும், மருத்துவ வசதி மேம்படுத்தவும், போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவும் டில்லி உதவும் என்றும் கூறினார். அந்த பகுதியில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் கூறினர். இதனிடையே இலங்கையில் உள்ள கலாசாரம் மற்றும் கல்வி நிறுவனத்திற்கு 20 பேருந்துகளை இந்திய தூதர் வழங்கினார். மேலும் மத்திய பகுதியில் சுற்றுலாத்துறை கல்வி மற்றும் விவசாயத்துறையை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து இந்திய தூதர் ஆலோசனை நடத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக