10 நவம்பர், 2010

மாகம்புர துறைமுகம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி துறைமுகத்தை திறந்து வைப்பார். மாகம்புர துறைமுகத்தை திறந்து வைக்கும் வைபவத்தினை மக்கள் கண்டுகளிக்கலாம்.

இத்தினத்தில் ஜெட்லய்னர் கப்பல் மற்றும் இரு கப்பல்கள் மாகம்புர துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக