10 நவம்பர், 2010

ம.ம.முன்னணியின் எதிர்கால திட்டங்கள்; புதிய தலைவர் இன்று அறிவிப்பார்


மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவராகப் பொறுப்பே ற்றுள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் இன்று (10) புதன்கிழமை தமது எதிர்காலத் திட்டங்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றார்.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளமை தொடர்பிலும் இன்று அவர் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு ‘கோல்பேஸ்’ ஹோட்டலில் விசேட செய்தியாளர் மாநாட்டை ராதாகிருஷ்ணன் எம்.பி. நடத்துகின்றார்.

இதன்போது தமது எதிர்கால அரசியல் திட்டங்களை அறிவிப்பதாக அவர் ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

முன்னணியில் இணைய வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை தமக்கு ஏற்பட்டதாகக் கூறிய ராதாகிருஷ்ணன் எம்.பி, தமது தனிக்கட்சி அரசியல் பிரவேசம் மலையகத்தில் ஒரு திருப்பு முனையைத் தோற்றுவிக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, அவருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக