9 நவம்பர், 2010

கண்டியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் கண்டுபிடிப்பு

கண்டி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி சுதத் பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கடந்த சில தினங்களாக இந்த தொற்று நோய் மிகவும் வேகமாகப் பரவி வருவதாகவும் மக்கள் இது சம்பந்தமாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருமலுடனான இலேசான காய்ச்சல் மூன்று தினங்களுக்கு மேல் காணப்படுமாயின் உடன் வைத்திய உதவியை நாடும் படியும் கேட்டுள்ளார்.

இன்நோயால் இம்முறை இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக