9 நவம்பர், 2010

உலகின் மூன்றாவது சக்தியாகத் திகழ்வது ஊடகங்களே : கெஹெலிய

இன்று உலகின் மூன்றாவது மாபெரும் சக்தியாக ஊடகங்கள் உருவெடுத்துள்ளதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.

இன்று வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள ஏ. ரத்நாயக்கா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஊடகம் தொடர்பான செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உலக வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது உலகில் ஏற்பட்ட அனைத்து சமூகப் புரட்சிகளுக்கும் ஊடகங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளன.

அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் கூறக் கூடிய பல்வேறு சமூக மாற்றங்களிலும் ஊடகங்கள் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளன.

நாளைய உலகில் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடியவர்கள் இன்றைய மாணவர்கள். எனவே இன்றைய மாணவர்கள் ஊடகங்கள் பற்றி தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

ஒருவருக்குச் சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலமே அவரை திறமையானவராக அல்லது விற்பன்னராக உருவாக்க முடியும். எனவே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது பாடசாலை நிர்வாகிகளின் கடமையாகிறது.

எனவே ஆசிரியர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து மாணவ சமுதாயத்திற்குச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக