9 நவம்பர், 2010

வெலிக்கடை சிறை தாக்குதல் சம்பவம் சிறை அதிகாரிகள், சி.ஐ.டி. தனித்தனியாக விசாரணை


வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொள்ள சென்ற பொலிஸார் மீது கைதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர் பாக பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் இந்த சம்பவம் தொடர்பாக தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

மேற்படி தாக்குதல் சம்பவத்தின் பின்னணி, தாக்குதல்களுக்கு பயன்படுத்தப் பட்ட பொருட்கள் எவ்வாறு கைதிகள் உள்ள பிரிவுக்குக் கொண்ட வரப்பட்டன என்பன தொடர்பாக விசேட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.சி.ஐ.டி.யினர் பல்வேறு கோணங்களில் பல குழுக்களாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காயமடைந்த பொலிஸாரும், சிறைக்காவலர்களும் சிகிச்சைக்குப் பின்னர் வீடுகளுக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக