9 நவம்பர், 2010

திருகோணமலை மாவட்டம், பன்குளத்தில் பெரும்பான்மையின குடியேற்றம்

- திருமலை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான பன்குளம் கிராமத்தில் சமீபகாலமாக திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இங்கு காலாகாலமாக தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் தற்போது மெதுமெதுவாக பெரும்பான்மையின குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இதன்படி பன்குளம் பிரதான வீதியின் இரு மருங்கிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். தமிழரின் பூர்வீக கிராமமான பன்குளம் திருமலை மாவட்டத்தில் நெற்செய்கைக்கு பிரசித்திபெற்ற இடமாகும். இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை உரிய தரப்புகள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதேச மக்கள் கோருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக