26 நவம்பர், 2010

2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு மடி கணனிகள் வழங்க நடவடிக்கை

2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் சகல மாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப் படவுள்ளன.

2011 இல் பல்கலைக் கழகம் செல்லும் மாணர்களுக்கு வழங்குவதற்கென சுமார் 25000 மடி கணனிகளைக் கொள்வனவு செய்ய இரண்டு பில்லியன் ரூபா தொகையை அரசு ஒதுக்கியுள்ளது.

எதிர்காலத்தில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் கணனி மயப்படுத்தடவுள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளது.

மத்திய மாகாணத்தில் சில பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் இவ்வாறான மடிகணனிகள் வழங்கப் பட்டுள்ளன. அண்மையில் சீகிரியாவில் ஒரு கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த 270 மாணவர்களுக்கும் மடி கணனிகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக