26 நவம்பர், 2010

வெள்ளம், மண்சரிவு பாதிப்பு: உடனடி நிவாரணத்துக்கு ரூ. 225 மில்லியன் ஒதுக்கீடு


வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென 225 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு இந்நிதி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். குருநாகல், புத்தளம், கொழும்பு, மாத்தளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் இந்நிதி மூலம் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வெள்ளம், மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட் டுள்ள வீடுகளுக்கு நஷ்டஈடும் வழங் கப்படும். இது குறித்து மதிப்பீடு களை மேற்கொள்ளுமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை, மற்றும் மண்சரிவு காரண மாக 3768 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 681 பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர். அத்தோடு 62 வீடுகள் முழுமையாகவும், 239 வீடு கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக