26 நவம்பர், 2010

கொழும்பில் குப்பையை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 2171,303 ரூபா செலவு: அரசாங்கம் தகவல்

கொழும்பு மாநகர சபையில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 21 இலட்சத்து 71 ஆயிரத்து 303 ரூபா செலவாகின்றது என அரசாங்கம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி. கொழும்பு மாநகர சபையில் கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் இந்திக்க பண்டக்ஷிர தொடர்ந்து பதிலளிக்கையில்,கொழும்பு மாநகர சபையினக்ஷில் நாளொன்றுக்கு 700 மெற்றிக் தொன் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. அதற்கென நாளொன்றுக்கு 21 இலட்சத்து 71 ஆயிரத்து 303 ரூபக்ஷி 16 சதம் செலவாகின்றது. குப்பைகளை சேகரிப்பதற்காக வீடுகளிலிருந்து கட்டணம் அறவிடப்படமட்டாது என்பதுடன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே ஒருவரி அறவிடப்படுகின்றது.

குப்பைகளை சேகரிப்பதற்கென மூன்று தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் தேசிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும். இதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாநகர சபையினால் குப்பைகளை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் மகரகம நகர சபையினால் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 594 ரூபாவும் மொறட்டுவை மாநகர சபை 29 ஆயிரத்து 239 ரூபாவையும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 81 ரூபாவையும் செலவிடுகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக