25 அக்டோபர், 2010

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்று ‘தீ’

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புமில்லையெனவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை ஏற்பட்ட இந்திடீர் தீ விபத்தினையடுத்து விமானப் படை மற்றும் கடற்படையினரின் உதவியுடன் சில மணித்தியாலங்களுக்குள் தீயை முற்றாகக் கட்டுப்படுத்த முடிந்ததாகத் தெரிவித்த பொலிஸார், சேத விபரங்கள் தொடர்பில் உடனடியாக எதனையும் குறிப்பிட முடியாதெனவும் தெரிவித்தனர்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டவர் களும் உள்நாட்டவர்களும் இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை; நிர்மாணப் பணிகள் இடம்பெறும் நுரைச்சோலை பகுதியில் அதிக வெப்பம் காரணமாகவே மேற்படி தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவித்தார்.

எவ்வித உயிர்ச் சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்பட வில்லையென அவர் குறிப்பிட்டார்.

கற்பிட்டி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேற்றைய தினம் விசேட பொலிஸ் குழுவொன்றை அனுப்பியதாகவும் தெரிவித் தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக