25 அக்டோபர், 2010

கைவிடப்பட்ட மோட். சைக்கிள்களில் 2050 பாவனைக்கு தகுதி ஆவணங்களை சமர்ப்பித்துப் பெற்றுக்கொள்ள கோருகிறார் கிளிநொச்சி அரச அதிபர்


யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களில் 2050 மோட்டார் சைக்கிள்கள் பாவனைக்கு தகுதியானதென வாகன பரிசோதகர்களினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. வாகனங்களின் உரிமை யாளர்கள் தமது வாகனம் தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மழை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது வேண்டுகோளுக்கிணங்க மோட் டார் போக்குவரத்து ஆணையாளர் நாய கம் டி. பி. எல். தர்மபிரியவின் ஆலோ சனைக்கு அமைய தொழில்நுட்ப உதவி ஆணையாளர் எஸ். ஏ. பிரேமரட்னா தலைமையிலான வாகன பரிசோதகர்கள் 12 பேர் அடங்கிய குழுவினர் பரிசோத னையை மேற்கொண்டதாக அவர் தெரி வித்தார்.

விஷேட பரிசோதனையின் போதே 2050 மோட்டார் சைக்கிள்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி, வாகனப் பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட் டை பிரதி, கிராம அலுவலகரின் உறுதிப் பத்திரம் என்பன சமர்ப்பித்து வாகன உரிமையாளர்கள் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக