25 அக்டோபர், 2010

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் மூலம் ரூ.42,500 கோடி சாதனைமிகு வருமானம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நாற்பத்தி இரண்டு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபா சாதனைமிக்க வருமானம் நாட்டிற்குக் கிடைக்கவுள்ளது.

ஒருவருட காலத்தினுள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்நாட்டிற்கு அனுப்பிவைத்த ஆகக் கூடிய தொகை என்ற சாதனையாக இது அமைகின்றது.

கடந்த ஆண்டிலே இந்நாட்டிற்குக் கிடைத்த வருமானம் 3.3 பில்லியன் டொலராகும். இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் அமுல்படுத்திய குடியகல்வு ஊழியர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டமே இதற்கான காரணமாக அமைந்துள்ளது. உயர் வருமானம் பெறும் தொழில்களுக்கு இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புதல், இந்த உழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கப்பெறும் வகையில் கூட்டு உடன்படிக்கைகளை மத்திய கிழக்கு நாடுகளுடனும் சேவை வழங்குநர்களிடமும் செய்துகொண்டமையே இதற்கான காரணமாகுமென இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா வீரசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் பெறும் தொழிற்று றைகளுக்கு அதிகமாக பயிற்றப்பட்ட ஊழியர்களை அனுப்புதல், தொழில்சார் நிபுணர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப் பும் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் இதுவரையில் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக