25 அக்டோபர், 2010

முன்னாள் புலிகள் 1000 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை: அமைச்சர்


முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் ஆயிரம் பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை அமைச்சர் குணசேகர கூறினார்.

இது குறித்து அந் நாட்டின் மறுவாழ்வு மற்றும் சிறைத் துறை சீர்திருத்த அமைச்சர் டி.ஈ.டபிள்யூ.குணசேகர ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர். அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடாத 304 பெண்கள் உள்பட 4,460 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பெண்கள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட உள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக