14 செப்டம்பர், 2010

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி




இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக