1 ஜூலை, 2010

‘ஊடகங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி சிறப்புரிமை முன்வைப்பது முறையல்ல’


ஊடகங்களில் எதனை வெளியிட வேண்டுமென்பதை ஊடக நிறுவ னங்களே தீர்மானிக்க முடியும். அதனை எதிர்க் கட்சியினர் பாரா ளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சி னையாக முன்வைப்பது முறைய ல்ல என அமைச்சர் விமல் வீரவன்ச நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஊடகங்கள் முன்னுரிமையளிக்க வில்லையென ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்றுச் சபையில் குறிப்பிட்டதுடன் அதனை ஒரு சிறப்புரிமை பிரச்சினையாகவும் முன்வைத்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பத்திரி கையோ இலத்திரணியல் ஊடகங்க ளோ பாராளுமன்றத்தில் ஒருவர் ஆற்றும் உரையை குறைத்தோ கூட்டியோ அல்லது தேவை யானதை மட்டுமோ வெளியிட முடியும். அது தொடர்பில் அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக