1 ஜூலை, 2010

கே.பிக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதது பற்றி ஜெனரல் சரத் பொன்சேகா கேள்வி





கே.பி என்கிற குமரன் பத்மநாதன் ஒரு பயங்கரவாதியென்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கே.பி.க்கு எதிரான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள அரசாங்கம் மாறாக அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதெனவும் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதன் பல மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், ஏன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியதென அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


அரசாங்கம் குமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டு, யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் ஒழுக்கத்தை சீர்குலைக்கிறது. அரசாங்கமானது கே.பியை சிறையில் தடுத்துவைக்கத் தவறியிருப்பது வெட்கப்படத்தக்க விடயமாகும் எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக