1 ஜூலை, 2010

ஐதேக மறுசீரமைப்பு அறிக்கை இன்று ரணிலிடம் சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மறுசீரமைப்புக்குழு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனைக் கையளிக்கவுள்ளது.

அறிக்கை கையளிக்கப்பட்டதும், விசேட செயற்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் இதன்போது மறுசீரமைப்பு யோசனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் ஐதேக தெரிவித்துள்ளது.

யோசனைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், சீரமைக்கப்படும். அதன்பின்னர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் சம்மேளனத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, யோசனைகள் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக