1 ஜூலை, 2010

4 பேரை கற்பழித்த 90 வயது முதியவர்

4 பேரை கற்பழித்த 90 வயது முதியவர்
தாய்லாந்து நாட்டில் உள்ள ஜியாங்மாங் நகரில் ஆஸ்திரேலியவை சேர்ந்த ஜோசப் கரூஸ் என்ற 90 வயது முதியவர் வசித்து வந்தார்.இவரது பக்கத்து வீட்டில் 7 வயதில் இருந்து 16 வயது வரை உள்ள 4 சகோதரிகள் இருந்தனர்.

அவர்களுக்கு ஆங்கில பாடம் சொல்லி கொடுப்ப தாக கூறி ஜோசப் கரூஸ் தனது வீட்டுக்கு அழைத்தார். வீட்டுக்கு வந்த அவர்களுக்கு விலை உயர்ந்த சாக்லேட் மற்றும் இனிப்புகளை கொடுத்து ஒருவர் மாறி ஒருவர் என4 பேரையும் கற்பழித்தார்.

இது நீண்ட நாட்களாக நடந்து வந்தது. அவர் கொடுக்கும் இனிப்பு பண்டங்களுக்கு ஆசைப்பட்டு 4 சகோதரிகளும் உடன் பட்டனர். அவர்களை ஆபாச படமும் எடுத்தார்.

4 சகோதரிகளும் வெளியே சென்று விளையாடு வதை விட ஜோசப் கரூஸ் வீட்டுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவது பெற்றோர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது பற்றி விசாரித்த போது கற்பழிப்பு விவகாரம் வெளியே தெரிந்தது இது பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். அவர் வேறு சில பெண்களுடனும் உல்லாசமாக இருந்த ஆபாச படங்கள் வீட்டில் சிக்கின.

எனவே மேலும் பலரையும் அவர் கற்பழித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக