9 ஜூலை, 2010

ஐநா நிபுணர் குழுவை ஏற்குமாறு அமெ. மீண்டும் வலியுறுத்து



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நியமித்துள்ள நிபுணர் குழுவை ஏற்றுக் கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நிபுணர் குழுவை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற தீமானத்தை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்வது சிறந்ததென அமெரிக்கா கருதுவதாக மார்க் டோனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக